மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!📸

வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!

விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!

இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி.

*முள்ளிவாய்க்கால் முற்றத்தில் கண்ணீருடன் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு -2025 மாபெரும் எழுச்சியோடு நடைபெற்றது!*


பொங்கு கடல் பெருக்கெடுத்து முள்ளிவாய்க்காலுள்்பேரலையாய் வந்தது போல தாயகத்தில் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் தமிழனப்படுகொலையை அலையலையாகத் திரண்டு எழுந்து நினைவு கூர்ந்தனர்.


அழுகையும் எழுகையுமாக மக்கள் கூடி உணர்வுகளால் ஆறாத வலிகளை ஆற்றிட முயன்ற காட்சி கண்ணீர் வர வைக்கின்றது.


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது இன்றைய நாள் மிகவும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.


அங்கிருந்து பெற்ற தகவல்கள் வருமாறு:


முதலில் முள்ளிவாய்க்கால் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டதன் பின்னர் அக வணக்கம் செலுத்தப்பட்டது.


அதனைத் தொடர்ந்து காலை 10.31 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றிவைக்கப்பட்டதோடு சம நேரத்திலேயே ஏனைய சுடர்களும் ஏற்றி வைக்கப்பட்டன.


உயிர்நீத்தவர்களின் உறவுகள் கதறியழ, கண்ணீர் மழையில் முள்ளிவாய்க்கால் முற்றம் நனைந்தது.


இந்த இனவழிப்பு யுத்தத்தின்போது சுமார் 150,000 க்கு மேற்படரட தமிழ் மக்கள் பேரினவாத சிறீலங்கா ஆயுதப் படைகளால் இனவழிப்பு செய்யப்பட்டனர்.


இற்றைவரையில் கிடைக்காத நீதிக்காக உலகெங்கும் தமிழரகள் அழுகையாகவும் எழுகையாகவும் இந்நாளை நினைவுகூர்வதும் போராட்ட வடிவங்களில் ஒன்றே!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.