பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான வழிகாட்டல் கையேடு வெளியிடப்பட்டுள்ளது!
அண்மையில் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 2024/2025 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான வழிகாட்டல் கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இந்தக் கையேடுகள் நாடெங்கிலுமுள்ள பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் நாளை 03ஆம் திகதி சனிக்கிழமை முதல் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் மே 09 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன், விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி எதிர்வரும் மே 30 எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமைபெற்ற மாணவர்களில் அரச பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இல. 20, வாட் பிளேஸ், கொழும்பு 07 எனும் முகவரியில் அமைந்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலகத்தில் அல்லது நாடெங்கிலுமுள்ள பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடம் கையேட்டுக் கட்டணமாக ரூபா ஆயிரம் செலுத்தி நேரடியாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
தபால் மூலம் அனுமதிக் கையேட்டைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் இலங்கை வங்கி, ரொறிங்டன் கிளையின் 0002323287 என்ற கணக்கிலக்கத்துக்கோ அல்லது மக்கள் வங்கி, நகர மண்டபக் கிளையின் 167-1-001-4-3169407 என்ற கணக்கிலக்கத்துக்கோ விண்ணப்பக் கட்டணமாக ரூபா ஆயிரம் வைப்பிலிட்ட சிட்டையுடன் சுயமாகத் தயாரிக்கப்பட்ட வேண்டுகைக் கடிதத்துடன், சுயமுகவரியிடப்பட்ட தபாலுறையுடன் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறும், மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் 011-2695301, 011-2695302 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
#UGC_Handbook2024/2025
பல்கலைக்கழக ஆணைக்குழு தற்பொழுது பல்கலைக்கழக 2024(2025) வருடத்திற்கு 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான விண்ணப்பத்திற்கான விபரங்கள் அடங்கிய கைந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை முதலில் முழுமையாக மாணவர்கள் வாசிக்க வேண்டும்.
ஆயினும் விண்ணப்பங்கள் நிகழ்நிலை (Online) இனூடாக www.ugc.ac.lk இல் https://admission.ugc.ac.lk/ தங்களுக்கு பதிவு செய்வதற்கு இடம் ஒதுக்கும்.
பின்னர் தான் விண்ணப்பங்களை நிரப்ப முடியும்.
கருத்துகள் இல்லை