அர்ஜுன் மகேந்திரன் என்ற இலங்கையர் சிங்கப்பூரில் இல்லை!
மத்திய வங்கி பிணைமுறி மோசடியின்
சந்தேக நபரான அர்ஜுன் மகேந்திரன்
தனது பெயரை மாற்றி வேறு பெயரில்
வசித்து வருவதாக தகவல் வெளி வந்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
அவரை இலங்கைக்கு அழைத்து வர
சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள போதிலும் சிங்கப்பூரில் அவர் அப்பெயரில் இல்லாததால் அவரை
அழைத்து வருவதில் சட்டச் சிக்கல்
இருப்பதாக புலனாய்வு விசாரணை பிரிவு தனக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்
எனினும் சிங்கப்பூர் அரசாங்கத்துடன்
இவ்விடயமாக தொடர்பு கொண்டு
அவர் வேறு பெயரில் அங்கு வசித்து வரும் விடயம் சிங்கப்பூர் அரசாங்கத்தின் அவதானத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் இந்த நிகழ்ச்சியின் போது தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை