வலி சுமந்த மாதத்தின் நான்காம் நாள்!

 


வலி சுமந்த மாதத்தின் நான்காம் நாள் 04.05.2009 அன்று வலுக்கட்டாயமாக புனர்வாழ்வு நிலையங்களிற்கு அழைத்து சென்ற சிங்கள இராணுவம்.


மே18 முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைகள் இனஎழுச்சிநாள்2025

 JusticeForTamilGenocide


வட தமிழீழம் யாழ்ப்பாண குடாநாட்டில் சிறிலங்கா இாணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 76 பொதுமக்கள் தெல்லிப்பளை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக யாழ். பலாலியில் பேரினவாத சிறிலங்கா இராணுவ உயர்அதிகாரிகளின் (இனப்படுகொலையாளிகள்) கலந்துரையாடலின் பின் ஞாயிற்றுக்கிழமை(03.05.2009) அரசாங்க அதிபர் செய்தி வெளியிட்டிருந்தார். 


மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை இரண்டு உறவினர்கள் மாதத்தில் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் பார்வையிடலாம் எனவும் அறிவித்தல் வெளியிட்டிருந்தார்.


யாழில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை பார்வையிட செல்லும் உறவினர்கள் சமைத்த உணவு, தொலைபேசி, கமராக்களை கொண்டு சொல்வதற்கு தடை விதிப்பதாக பேரினவாத சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தலின்படி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.


இதே வேளை தங்கள் உறவினர்கள் வலுக்கட்டாயமாக புனர்வாழ்வு நிலையங்களிற்கு அழைத்து செல்லப்பட்டதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் முறையிட்டனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் வெளியவர அனுமதிக்கபடாமல் உள்ளதை உறுதிப்படுத்தியிருந்தது.


யாழ். மாவட்டத்தில் 12 தடுப்பு முகாம்களில் 11079 பொதுமக்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் CARE, HUDEC, MSS, WUSE, ZOA, WORLD VISION, FORUD, and DRC CHIRISTIAN AID ஆகிய 9 தொண்டு நிறுவனங்கள் அவர்களை சந்திப்பதற்கு அனுமதிவழங்கப்பட்டிருந்தது. 



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.