சுவாமிகளின் திருவுடல் அக்கினியுடன் சங்கமம்!📸

நேற்று முன்தினம் (01.05.2025) வியாழக்கிழமை தேகவியோகம் அடைந்த நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோம சுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளின் திருவுடல் நேற்று அக்கினி யுடன் சங்கமமாகியது.


முன்னதாக நல்லை ஆதீ னத்தில் வைக்கப்பட்டிருந்த சுவாமிகளின் திருவுடலுக்கு நேற்று மாலை 4 மணியள வில் அபிசேகம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து கிரியை கள் இடம்பெற்றன.


தொடர்ந்து கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களின் தலைமை யில் ரிஷி தொண்டுநாத சுவாமிகள், வேதாந்த குரு பீடாதிபதி சுவாமி வித்தி யாசாகர், சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகி யோரின் பிரார்த்தனை உரைகள் இடம்பெற்றன.


தொடர்ந்து மாலை 5.30 மணியள வில், விசேடமாக அலங்கரிக்கப்பட்ட பூந்தண்டிகையில் சுவாமிகளின் திரு வுடல் வைக்கப்பட்டு, இறுதி ஊர்வலம் ஆரம்பமாகியது.


சுவாமிகளின் விருப்பப்படி நல்லூர் செம்மணி இந்து மயானத்தில் தகன நிகழ்வுகள் இடம்பெற்றன.


மாலை 6 மணி 50 நிமிடமளவில் சுவாமிகளின் திருவுடலுக்கு கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் அக்னி ஏற்றம் செய்ய சுவாமிகளின் திருவுடல் தீயுடன் சங்கமமானது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.