இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை!
அன்புக்குரிய என்னை வளர்த்துவிட்ட வட்டுக்கோட்டை மண்ணுக்கும் மக்களுக்கும் வணக்கம்!
நாளைய தினம் நடைபெறவுள்ள தேர்தலில் வட்டுக்கோட்டையின் வலி மேற்குப் பிரதேச சபையினைத் தாம் கைப்பற்றியே தீருவோமென தமிழினத்தைக் கருவறுத்த JVPயினர் சூளுரைத்துள்ளனர். தமிழீழப் பிரகடனத்தை நிறைவேற்றிய நான் பிறந்த வட்டுக்கோட்டை மண்ணைச் சிங்கள பௌத்த பேரினவாதக் கட்சியான JVP கைப்பற்றினால், அதன் பின்னர் எனது அரசியல் பிரசன்னம் தேவையற்றது என்று கருதுகின்றேன்.
நாளைய தேர்தலில் எனது மண்ணைச் சேர்ந்த நீங்கள் சைக்கிள் சின்னத்திற்குப் பேராதரவு வழங்கி, இனவாத JVPயை மண்கவ்வ வைப்பீர்கள் என்று உறுதியாக நம்புகின்றேன். அவ்வாறு செய்யவேண்டுமென்று அன்புரிமையோடு அறைகூவல் விடுக்கின்றேன்!
மாறாக, நாளைய தேர்தலில் வட்டுக்கோட்டை வலி மேற்குப் பிரதேச சபையின் 15 வட்டார மொத்த வாக்குகளில் சைக்கிள் சின்னத்தை விட JVP ஒரு வாக்கைத் தன்னும் அதிகமாகப் பெற்றால், நான் தேர்தல் அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொள்வேன் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. ஆனால் தமிழினத்தின் உரிமைக்கான எனது விடுதலைப் பயணம் அண்ணன் கஜேந்திரகுமாரோடு இலட்சியம் ஈடேறும்வரை தொடரும்.
இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை!
முடிவு உங்கள் கைகளில்!
உங்கள் அன்பின்,
சுகாஷ்.
கருத்துகள் இல்லை