ஈரானுடனான "போரின்" போது காசாவில் 870 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்!
ஈரானுடனான "போரின்" போது காசாவில் 870 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் - சுகாதார அதிகாரிகள் தகவல்
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தாக்குதல் பரிமாற்றத்தின் மீது உலகின் கவனம் குவிந்திருந்த வேளையில், 12 நாட்கள் நீடித்த இந்த மோதலின் போது காசாவில் இஸ்ரேலின் அட்டூழியங்கள் தடையின்றித் தொடர்ந்தன.
சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, இஸ்ரேல்-ஈரான் மோதலின் போது இஸ்ரேலியப் படைகளால் குறைந்தது 870 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
மொத்த பாலஸ்தீனிய உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 56,077 ஆக உள்ளது. இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இறந்ததாகக் கருதப்படும் ஆயிரக்கணக்கானோர் இதில் சேர்க்கப்படவில்லை.
கருத்துகள் இல்லை