செம்மணி அகழ்வு: 40 மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!📸

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியின் எட்டாம் நாளில், இன்றுவரை மொத்தம் 40 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி A.A. ஆனந்தராஜா, தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவா, மற்றும் சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன.


இதுவரை 34 முழுமையான மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலதிகமாக, 6 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் இரண்டு எலும்புக்கூடுகள் குழந்தைகளுடையதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.


முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட 34 எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தடயவியல் மற்றும் மானிடவியல் பிரிவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.