சங்கக் கோரிக்கைகளிலும் மக்கள் நலனிலும் சமச்சீர் பார்வை தேவை!
வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களின் நலனில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சேவைகளை நாடும் பொதுமக்களின் நலனிலும் அதே முக்கியத்துவத்துடன் கவனம் செலுத்த வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார்.
இன்றைய தினம் (புதன்கிழமை – 02.07.2025), வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மற்றும் ஆளுநருடனான சந்திப்பில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில்,
வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்)
சுகாதார அமைச்சின் செயலாளர்
சுதேச வைத்தியத்துறை மாகாண ஆணையாளர்
உதவிப் பிரதம செயலாளர்
சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சங்கத்தினால் பின்வரும் முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன:
புதிய பதவிநிலை ஆளணிகள் உருவாக்கம்
வெற்றிடங்களின் நிரப்பல்
சிற்றூழியர்களுக்கான பதவி உயர்வுகள்
சுதேச வைத்தியத்துறையில் தாதியர் நியமனம் (தற்போது ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது)
இடமாற்றம் மற்றும் நியமன நிலையங்கள் தொடர்பான சிக்கல்கள்
மேலும், மாகாண மட்டத்தில் பணியாற்றும் வைத்தியர்கள் கைவிரல் இயந்திரத்தில் வரவுப் பதிவு செய்யவில்லை என்பதையும், உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டும் கைவிரல் பதிவு செய்ய நிர்பந்திக்கப்படுவது சமத்துவமற்ற நடைமுறையாக இருப்பதாகவும் சங்கத்தினர் கவலை தெரிவித்தனர்.
இந்த கோரிக்கைகள் மற்றும் சிக்கல்களை பரிசீலனை செய்த ஆளுநர், அதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கினார்...
கருத்துகள் இல்லை