வடமாகண தென்னை முக்கோன வலய அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல்!📸
வடமாகண தென்னை முக்கோன வலய அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் இரண்டாவது நாளாகவும் நேற்று (01.08.2025) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றிருந்தது.
அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, பிரதி அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் வசந்தமூர்த்தி, மாவட்ட அரசாங்க அதிபர், தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சுனிமல் ஜெயக்கொடி ஆகியோரோடு பிரதேச செயலாளர்கள், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது வவுனியா மாவட்ட தெங்கு உற்பத்தியாளர்களுக்கான உரமானியம், உதவித்தொகை பயனாளிகளுக்கான புதிய தென்னங் கன்றுகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
கருத்துகள் இல்லை