இந்தியா-பாகிஸ்தான் கைக்குலுக்கவில்லை சர்ச்சை!
துபாயில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றிபெற்றபிறகு, பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைக்குலுக்காமல் தவிர்த்தது சர்ச்சையாக மாறியது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி துபாயில் நடைபெற்ற போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தின. இதில், பாகிஸ்தான் நிர்ணயித்த 127 ரன்களை, இந்திய அணி வெகு விரைவாகவே எட்டிப்பிடித்து வெற்றிவாகை சூடியது. எனினும், இந்தப் போட்டிக்குப் பிறகு இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
கருத்துகள் இல்லை