இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கடந்த மாதம் 13ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 07 இராமேஸ்வரம் மீனவர்களை நிபந்தனையுடன் விடுவிக்க யாழ் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் குறித்த மீனவர்கள் இன்று (24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது நீதவான் நளினி சுபாஸ்கரன் குறித்த மீனவர்களுக்கு 6 வருடங்கள் ஒத்திவைக்கப்பட 2 வருட சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
இதேவேளை ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி நெடுந்தீவு கடலில் மீன்பிடி உபகரணங்கள் இன்றி கைதான மேலும் 4 தமிழக மீனவர்களும், எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை