அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு!

 


அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார் என பொலிஸார் தெரிவித்தனர்.


​செவ்வாய்க்கிழமை வத்துகெதரவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பலருடன் பயணித்த முச்சக்கர வண்டி மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.


​நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த துப்பாக்கிச் சூட்டின் இலக்கு, குண்டுகளால் தாக்கப்படவில்லை என்றும், ஆனால் தாக்குதல் நடத்தியவர்களுடன் ஏற்பட்ட மோதலின் போது அவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


​சிகிச்சைக்காக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


​இந்தத் தாக்குதலில் வேறு எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், துப்பாக்கிதாரிகள் இருவரையும் கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.