"விடியல்" நூல் வெளியீட்டு விழா!📸


மாற்றம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் 

"விடியல்" நூல் வெளியீட்டு விழாவானது மாற்றம் அறக்கட்டளை இயக்குனர் திரு எஸ். பெனிக்சன் தலைமையில் இன்று (23.10 2025) மாலை 3.30 மணிக்கு மாவட்டச்செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது 


இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணம் ஆளுநர் 

கௌரவ திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் கௌரவ விருந்தினராக வளர்பிறை இயக்குனர் அருட்பணி சூசை டெமியன் அமதி அடிகளாா் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர் 


பிரதம விருந்தினரான வடமாகாணம் ஆளுநர் 

கௌரவ திரு ந. வேதநாயகன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் இந்நூலாசிரியர் வின்சன் பற்றிக் அடிகளாா் போதைக்கு அடிமையானவர்களை மீட்பதற்காக பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியபோதும் தனது சமூகப்பணியினை இடைவிடாது தொடர்ந்து மேற்கொண்டுவருவதாகவும் இந்நூல் சமூகத்தின் விடியலுக்கான பொருத்தப்பாடுடையதாக காணப்படுவதாகவும் தெரிவித்து, அருட்கலாநிதி வின்சன் பற்றிக் அவர்களை பாராட்டியதுடன் அவரின் சமூகப்பணி தொடர வேண்டும் எனவும் அதற்கான ஆதரவை தொடர்ந்து வழங்குவதாகவும் தெரிவித்தாா். 


சிறப்பு விருந்தினரான யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. ம. பிரதீபன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் மாற்றம் மற்றும் விடியல் இரண்டுமே மிகவும் பொருத்தப்பாடுடைய தலைப்பாக காணப்படுவதாகவும் மாற்றம் அறக்கட்டளை நிறுவனமும் விடியல் என்ற நூல் இரண்டுமே சமூகத்திற்கு தேவைப்பாடுடையதும் வேண்டப்படுகின்ற விடயமாக இருப்பதாகவும் தெரிவித்ததுடன், சமூகத்தில் மாற்றத்தையும் விடியலையும் ஒன்றாக காண வேண்டும் என்பதற்காக இவ்"விடியல் "என்ற நூலை வின்சன் பற்றிக் அடிகளாா் வெளியிட்டு இருப்பதாகவும் தெரிவித்ததோடுஇந் நூல் இளம் சந்ததிகளின் வாழ்வில் மாற்றத்தையும் விடியலையும் ஏற்படுத்துமாக இருந்தால் உண்மையில் அதற்காக மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார். மேலும் வின்சன் பற்றிக் அடிகளாா் சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வர தன்னாலான பணிகளை யாழ்ப்பாண மாவட்டம் மட்டுமன்றி கிளிநொச்சி, மன்னாா் போன்ற மாவட்டங்களிலும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், மாற்றம் அறக்கட்டளை நிறுவனம் சிறப்பாக தனது பணியை மேற்கொண்டு வருவதாகவும் விடியல் என்ற நூலை 30வது நூலாக வெளியிட்டுள்ளதாகவும் இலகுவாக வாசிக்க விளங்கக்கூடிய வகையில் நூல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் சமூகத்திற்கு தேவையான விடயத்தை கருப்பொருளாகக் கொண்டு ஆக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு மாற்றம் அறக்கட்டளை நிறுவனத்திற்கும் வின்சன் பற்றிக் அடிகளாா் அவர்களுக்கும் செயற்குழுவினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.அத்தோடு போதைப்பொருள் பாவனை, மதுபாவனை ஆகிய இரண்டுமே யாழ்ப்பாண மாவட்டத்தில் புள்ளிவிவர அடிப்படையில் அதிகமாக நுகர்கின்ற தன்மை காணப்படுவதாகவும் அதனை அடையாளம் கண்டு ஒவ்வொருவரையும் வழிப்படுத்தி ஆற்றுப்படுத்த வேண்டும் என்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு சமூகத்தின் மாற்றத்தில் பாரிய பங்களிப்பு இருப்பதாகவும் கடமைக்கு மேலதிகமாக மாற்றத்தை கொண்டு வர திடசங்கற்பம் பூண்டு உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டுமென்றும் ஒவ்வொருவரது வாழ்விலும் விடியலை ஏற்படுத்துவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து சமூகத்திற்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தாா்.


"விடியல்" நூல் முதற்பிரதியினை கௌரவ ஆளுநர் அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு வழங்கி வைத்தார். 


விடியல் நூல் மதிப்பீட்டு உரையினைதேசிய கல்வி நிறுவகத்தின் வளவாளரும் யாழ் தேசிய கல்வியியல் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி திரு. பா. தனபாலன் அவர்கள் ஆற்றியிருந்தாா் இதில் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் அவலங்களையும் அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளையும் இலகுவான தமிழில் ஆராய்ந்து "விடியல்"எனும் நூலினை படைத்திருப்பதாக தெரிவித்திருந்தாா் 


 இந்நிகழ்வில் இந்து மதகுரு , 

மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்டச் செயலாளர், மாகாண சிறுவர் நன்னடத்தை உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப் பாட்டுச் சபையின் மாவட்ட இணைப்பாளர் மாவட்டச் செயலக அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர்,மாற்றம் அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.