15 பில்லியன் டொலர் செலவில் கூகுளின் செயற்கை நுண்ணறிவு மையம்!
அண்மையில் வெளிவந்துள்ள ஒரு செய்தி, இந்திய இளைஞர்கள் மற்றும் தொழில்நுட்பத் துறையினர் மத்தியில் ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், இந்தியாவில் அதன் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) மற்றும் டேட்டா சென்டர் மையத்தை அமைக்க முடிவெடுத்துள்ளது. இதற்காக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் (2026-2030) சுமார் 15 பில்லியன் டொலர் அளவுக்கு மிகப்பெரிய முதலீட்டை செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்த மாபெரும் திட்டத்தின் மையப்புள்ளி ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அழகிய கடற்கரை நகரமான விசாகப்பட்டினம் ஆகும். கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, இது அமெரிக்காவிற்கு வெளியே கூகுள் செய்யும் மிகப் பெரிய AI முதலீடு என்று பெருமையுடன் அறிவித்துள்ளார். இது இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

.jpeg
)





கருத்துகள் இல்லை