பண்டாரவளை, பிந்துனுவேவா சிறைகள் மீது சிங்களவர்கள் நடத்திய தாக்குதலில் தமிழ் அரசியல் கைதிகள் 26 பேர் கொல்லப்பட்டனர் – 2000!

 


வரலாற்றில் இன்று – அக்டோபர் 25 

*இலங்கையில் பண்டாரவளை, பிந்துனுவேவா சிறைகள் மீது சிங்களவர்கள் நடத்திய தாக்குதலில் தமிழ் அரசியல் கைதிகள் 26 பேர் கொல்லப்பட்டனர் – 2000

1760 – மூன்றாம் ஜார்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முடிசூடினார்.


1900 – ஐக்கிய இராச்சியம் திரான்சுவால் குடியேற்றத்தை (இன்றைய தென்னாப்பிரிக்காவில்) இணைத்துக்கொண்டது.


1917 – ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி (பழைய யூலியன் நாட்காட்டியின் படி), இடம்பெற்றது. போல்செவிக்குகள் குளிர்கால அரண்மனையைக் கைப்பற்றினர்.


1918 – அலாஸ்காவில் பிரின்சஸ் சோஃபியா என்ற கப்பல் மூழ்கியதில் 353 பேர் உயிரிழந்தனர்.


1920 – இங்கிலாந்தின் பிரிக்சுடன் சிறையில் 74 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சின் பெயின் கோர்க் பிரபு டெரன்சு மெக்சுவீனி இறந்தார்.


1924 – இந்தியாவில் சுபாஷ் சந்திர போஸ் பிரித்தானியரால் சிறைப்பிடிக்கப்பட்டார்.


1927 – இத்தாலியப் பயணிகள் கப்பல் பிரின்சிபெசா மபால்டா பிரேசிலில் மூழ்கியதில் 314 பேர் உயிரிழந்தனர்.


1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்காவின் டாங் என்ற நீர்மூழ்கிக் கப்பல் கப்பலில் இருந்த நீர்மூழ்கிக் குண்டு வெடித்ததில் மூழ்கியது.


1944 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பைன்சில் ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் வரலாற்றில் பெரும் கடற்சமர் இடம்பெற்றது.


1945 – ஜப்பான் கூட்டு நாடுகளிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து சீனக் குடியரசு தாய்வானை இணைத்துக் கொண்டது.


1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி: சோவியத் ஏவுகணைகள் கியூபாவில் உள்ளதைக் காட்டும் புகைப்படங்கள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக் கூட்டத்தில் காண்பிக்கப்பட்டன.


1971 – ஐநாவிலிருந்து சீனக் குடியரசு வெளியேற்றப்பட்டு மக்கள் சீனக் குடியரசு ஏற்றுக்கொள்ளப்பட்டது.


1973 – இஸ்ரேல்-எகிப்து இடையிலான யோம் கிப்பூர்ப் போர் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது.


1983 – கிரெனடா பிரதமரும் அவரது ஆதரவாளர்கள் பலரும் இராணுவப் புரட்சியை அடுத்துத் தூக்கிலிடப்பட்ட ஆறாவது நாள் ஐக்கிய அமெரிக்காவும் அதன் கரிபியன் கூட்டு நாடுகளும் கிரெனாடாவை முற்றுகையிட்டு அதனைக் கைப்பற்றின.


1995 – அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தில் தொடருந்து ஒன்று மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்றுடன் மோதியதில் ஏழு மாணவர்கள் உயிரிழந்தனர்.


1995 – கொழும்பு கொலன்னாவை எண்ணெய்க் குதங்களில் இடம்பெற்ற பெரும் தீயில் 21 படையினர் கொல்லப்பட்டனர்.


1997 – உள்நாட்டுப் போரை அடுத்து ஜனாதிபதி பாசுக்கால் லிசூபா பிராசவில்லி நகரை விட்டு வெளியேறியதை அடுத்து டெனிசு இங்குவேசோ காங்கோ குடியரசின் ஜனாதிபதியாகத் தன்னை அறிவித்தார்.


2000 – பிந்துனுவேவா படுகொலைகள்: இலங்கையில் பண்டாரவளை, பிந்துனுவேவா சிறைகள் மீது சிங்களவர்கள் நடத்திய தாக்குதலில் தமிழ் அரசியல் கைதிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.


2001 – விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது.


2001 – இந்தியாவில் தடா சட்டத்துக்கு பதிலாக போட்டோ என்ற புதிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 23 தீவிரவாத அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது.


2007 – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முதலாவது இரட்டை அடுக்கு விமானம் ஏர்பஸ் ஏ380 தனது முதலாவது சேவையை சிட்னிக்கு ஆரம்பிக்கிறது.


2009 – பகுதாது நகரில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 155 பேர் கொல்லப்பட்டனர்.


2017 – சீனப் பொதுவுடமைக் கட்சியின் 19ஆவது தேசியப் பேராயத்தில் சீ சின்பிங் இரண்டாவது தடவையாக கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.