தஷ்வந்தின் தூக்கு தண்டனை ரத்து!

 


ஷ்அந்த 6 வயது சிறுமிக்கு விளையாடுவது பிடிக்கும்.. பிங்க் கலர் பிடிக்கும்.. அம்மா, அப்பாவை மிகவும் பிடிக்கும்.. படிப்பதில் சுட்டி.. ஆறு வயது வரை வீட்டுக்குள் தேவதையாக வலம் வந்து மகிழ்ச்சியை வாரி இறைத்தவள்.. 2017 பிப்ரவரி 5 ஆம் தேதி வீட்டு வளாகத்தில் சக குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைக்கு ஹோம் ஓர்க் செய்யவேண்டிய ஞாபகம் வந்துவிட்டது. பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில் ஹோம் ஓர்க் செய்ய வீட்டுக்கு திரும்பிய ஹாசினிக்கு அதுதான் கடைசி தருணங்கள்..

சிறுமியை காணவில்லை என்று முதலில் நமக்கும் செய்தி வந்தது. அந்த சிறுமியை அந்த பகுதி மக்களே திரண்டு தேடிக் கொண்டிருந்தனர். இந்த காட்சிகளைக் கண்டபோது பெற்றோராக இருக்கும் யாருக்கும் பதறும். அந்த குழந்தையை அங்கிருந்த அத்தனை பேரும் பதற்றத்துடன் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடன் தானும் தேடிக்கொண்டிருந்தான் அந்த குற்றவாளி. அப்பார்ட்மென்ட்டின் சிசிடிவி காட்சிகளை சோதித்தபோது அங்கு நமது செய்தியாளரும் இருந்தார். அந்த சிசிடிவியை பரிசோதித்தபோதும் அந்த குற்றவாளியும் அந்த கும்பலில் இருந்தது யாருக்கும் தெரியவில்லை. எல்லோருக்கும் குழந்தையை காணவில்லை. அதுவும் பெண் குழந்தை. வெளியே விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்தவர்கள் யாரும் அதன் பிறகு அந்த சிறுமியை பார்க்கவில்லை.

சிறுமியைத் தேடுவது போல நடித்து வந்த தஷ்வந்த், சிசிடிவி காட்சியில் நள்ளிரவு நேரத்தில் பையுடன் வெளியே சென்றது தெரியவந்து விசாரிக்கப்பட்டபோதுதான் பிடிபட்டான். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, உயிரோடு இருந்தால் காட்டிக்கொடுத்து விடுவாள் என்று அஞ்சி அந்த குழந்தையை நெடுஞ்சாலையோரம் எரித்துக்கொல்லப்பட்ட இடத்தை காட்டியது இதே தஷ்வந்த் தான். சிறுமி எப்படியும் கிடைத்துவிடுவாள் என்று கண்ணீருடன் காத்திருந்த குடும்பத்துக்கு கருகிய உடல்தான் கிடைத்தது. இதைவிட ஒரு பெற்றோருக்கு வேதனையான நிகழ்வு நடக்க முடியுமா என்ன? மகளை இழந்த துயரத்தில் இருந்து மீள முடியாமல் அந்த குடும்பம் மீண்டும் ஆந்திராவுக்கே திரும்பி விட்டது.


தஷ்வந்த்
தஷ்வந்த் pt web

தஷ்வந்தை கைது செய்த காவல்துறை, பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. விசாரணைக்காக மதனந்தபுரம் வீட்டிற்கு தஸ்வந்தை அழைத்துச்சென்றபோது, அங்கே குழுமியிருந்த உறவினர்கள் மற்றும் பொது மக்கள் தஷ்வந்தை அடித்து உதைத்தனர். அவரை காவல்துறையினர் பொதுமக்களிடம் இருந்து மீட்டு அழைத்துச்சென்றனர்.

தஷ்வந்த் தான் இந்த கொடூர கொலையை செய்தார் என்பது தெரியவந்ததை அடுத்து, அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதனால், ஜாமீனில் வெளிவர முடியாமல் கடந்த 6 மாதங்களாக அவர் சிறையிலிருந்தார். குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்றன.

தஷ்வந்த்
தஷ்வந்த் pt web

காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்த போதிலும் 90 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாத காரணத்தினால் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. தஷ்வந்தின் தந்தை தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை உரிய பதிலளிக்கவில்லை எனவும் கூறி குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தஷ்வந்த்தை மகளிர் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. தங்கள் ஆசை மகளை கொடூரமாக கொன்ற தஷ்வந்திற்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த ஹாசினியின் பெற்றோருக்கு நீதிமன்றத்தின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.