தேநீரே ஓரு அமுத ரசம்!

 


❣️நீ இல்லாமல் 

     பொழுது விடிந்ததில்லை.


❣️உன்னை ருசிக்காமல் 

     ஒரு நாளும் கடந்ததில்லை.


🌹தீண்டாமல் உன்னை நான்

     தாண்டியதில்லை.


🌹வேண்டாமென்று உன்னை நான்

. வெறுத்ததுமில்லை.


🌷ஆறுதலுக்கும் ஆவலுக்கும் 

     அர்த்தம் நீ.


🌷மாறுதலுக்கும் மனத்தேறுதலுக்கும்

. முத்தம் நீ.


💋என் இதழ்களில் முத்தமிடும்

     அமுத ரசம் நீ.


💋உன் இனிமையில் பித்தமேறும்

     இதய சுகம் நான்.


💝நீயே எனக்கு சொற்பனம். 


 #தேநீருக்கே இக்கவிதை சமர்ப்பணம். ☕️


-பிறேமா(எழில்)-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.