மூடிய அறைக்குள் தமிழினத்தைக் காட்டிக் கொடுத்த ஈனத் தலைமைகள்!📸
இந்திய வெளிவிவகார அமைச்சர் திரு. ஜெய்சங்கர் அவர்களுக்கும் தமிழ்க் கட்சிகளுக்குமிடையிலான சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் #கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மட்டுமே #சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தார்!
கேவலம் #தமிழரசுக் கட்சியும் #ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் 13ஆம் திருத்தத்தையும் மாகாணசபைத் தேர்தலையுமே வலியுறுத்தினர்! சமஷ்டி பற்றி வாயே திறக்கவில்லை. #சுமந்திரன் அவர்கள் மட்டுமல்ல, #சிறீதரன் அவர்கள் கூட சமஷ்டி கேட்கவில்லை.
தமிழரசுக் கட்சியின் தலைவரான சீ.வி.கே. #சிவஞானம் அவர்கள் ஒருபடி மேலே சென்று “13ஆம் திருத்தம் இந்தியா பெற்றெடுத்த பிள்ளை. அது எங்களுக்கு வேண்டும்” என்று ஒற்றைக்காலில் நின்றார்.
இனத்துக்கானவர்கள் யார்?
இனத்தைக் காட்டிக் கொடுப்பவர்கள் யார்?
எம்மவர்களே எம்மை அழிக்கின்றார்கள்!
மக்களே #சிந்தியுங்கள்!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் கஜேந்திரகுமாரையும் பலப்படுத்தத் தவறின் விரைவில் தமிழரின் சரித்திரம் முடியும்!
நான் எழுதியது அத்தனையும் சத்தியம்!
தவறென்றால் எனக்கெதிராகத் தாராளமாக வழக்குத் தாக்கல் செய்யுங்கள் #ஈனத் #தலைமைகளே!
க. சுகாஷ்,
பேச்சாளர்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.



.jpeg
)





கருத்துகள் இல்லை