நன்றி கூறிய ஜனாதிபதி!!


இலங்கையில் அண்மையில் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) தொடர்ச்சியாக வழங்கி வரும் மனிதாபிமான உதவிகளுக்காக, அந்த நாட்டின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நன்றி தெரிவித்தார்.

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஜனாதிபதி ஷேக் முகமது , ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இலங்கை மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்வதில் இலங்கையின் பாதுகாப்பு மற்றும் மீண்டெழும் திறன் குறித்து அவர் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

உலகளவில் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் சமூகங்களுக்கு சரியான நேரத்தில் ஆதரவை வழங்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் நீண்டகால மனிதாபிமானக் கொள்கையின் அடிப்படையில் இந்த உதவி வழங்கப்படுகின்றது.

இந்த மனிதாபிமான உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடி சுமையைக் குறைப்பதோடு, நீண்ட கால மீட்சி மற்றும் புனரமைப்பு முயற்சிகளுக்கு பெரும் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.