ரணிலால் ஏற்பட்ட பரபரப்பு!!

 


முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் நீண்டகால தலைவருமான ரணில் விக்ரமசிங்கவின் நிலைப்பாடு தென்னிலங்கை அரசியலில் பேசு பொருளாக மாறியுள்ளது. கட்சியின் தலைமைத்துவத்தை இளம் தலைமைக்கு வழங்கும் நிலைப்பாட்டுக்கு ரணில் வந்துள்ளமை அரங்கில் பெரும் மாற்றமாக விவாதிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைவுக்கு தனது தலைமை தடையாக மாறினால், எந் நேரத்திலும் கட்சித் தலைமைப் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்த கலந்துரையாடப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.