வழித்தெடுத்த
நேசத்தை
வாசனைத் திரவியமாக
தடவினேன்.
இக் கமத்தலைத்தான்,
இவர்கள்
காதலென்கிறார்கள்.
நான்
கசிந்துருகும்
உயிர்த்தலென்கிறேன்.
இங்குதான்
என்னுலகம்
வேறாகிப்போனது
பித்தனென
இவர்கள்
பிதற்றுவதற்கும்
பிறகென்னை
வெறுப்பதற்குமான
அந்நியப் போக்கில்.
- ரவி அல்லது, பட்டுக்கோட்டை.
கருத்துகள் இல்லை