மக்களுக்கு எச்சரிக்கை!!

 


நாட்டில் அனர்த்தத்திற்கு உள்ளான இடங்களைப் பார்வையிட பொதுமக்கள் வருவதைத் தவிர்க்குமாறும், அது மிகவும் ஆபத்தானது என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,

வெள்ள நீர் மிகவும் வேகமான நீரோட்டத்துடன் பாய்வதாகவும், அதனால் நீரில் குளிப்பதையும், களியாட்டங்களில் ஈடுபடுவதையும் தவிர்க்குமாறும்   பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிக மழையுடனான வானிலையால் மக்கள் தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறு பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

அதேவேளை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உடனடியாக அங்கிருந்து வெளியேற நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.