ஒரு இலட்சம் பேர் கைது!!
முழு நாடும் ஒன்றாக செயற்திட்டத்தின் கீழ் இதுவரையில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் கீழ், 100,000 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 1973 சந்தேக நபர்களுக்கு எதிராக பொலிஸார் தடுப்பு உத்தரவுகளைப் பெற்றுள்ளதோடு, 1639 பேர் மறுவாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் இச் சோதனை நடவடிக்கையின்கீழ், 524 கிலோகிராம் 906 கிராம் ஹெரோயின், 1416 கிலோகிராம் 41 கிராம் ஐஸ் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் 11 கிலோகிராம் 674 கிராம் கஞ்சா. 199 கிலோகிராம் 864 கிராம் குஷ், 121 கிலோகிராம் 962 கிராம் ஹஷிஷ் மற்றும் 932,976 போதைப்பொருள் மாத்திரைகள் ஆகியவையும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

.jpeg
)





கருத்துகள் இல்லை