இலங்கையின் எரிபொரு கையிருப்பு!!

 


கியூ.ஆர். எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரு கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முனையங்களில் இவற்றை இறக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதன்படி தற்போதுள்ள கையிருப்பு மற்றும் திட்டமிடப்பட்ட இறக்குமதிகள் மூலம் எதிர்வரும் ஜூலை மாதம் வரை தட்டுப்பாடின்றி எரிபொருளை வழங்க முடியும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தகவல்கள் கூறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சூழலில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் போதுமான அளவு விநியோகம் தொடர்கின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.