இலங்கையில் பரவும் நோய்!!

 


இலங்கையில்  பரவிவரும் மூளைக்காய்ச்சல் தற்போது நான்கு மாவட்டங்களுக்குப் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 காய்ச்சல் பரவியவர்களின் எண்ணிக்கை 200 ஆக பதிவாகியுள்ளதாகவும், ஐம்பத்திரண்டு நோயாளிகள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தொற்றுநோயியல் பிரிவின் சமூக சுகாதார நிபுணர் குஷானி தம்பரரா தெரிவித்துள்ளார்.

பக்டீரியா தொற்றுகளை விட லேசானதாக இருக்கும் இந்த வகை மூளைக்காய்ச்சலை எளிதில் குணப்படுத்த முடியும் என்று தொற்றுநோயியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அதன்படி, நாட்டில் பரவி வரும் மூளைக்காய்ச்சல் ஒரு வைரஸால் ஏற்படுவதால், முறையான மருத்துவ சிகிச்சையுடன் மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் குணப்படுத்த முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாத்தறை, நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் மூளைக்காய்ச்சல் நோயாளிகள் பரவியதை தொடர்ந்து, நோய்ப்பரவலியல் திணைக்களம், மாவட்ட மற்றும் சுகாதார அலுவலர் அலுவலகங்கள், நோயாளிகளின் தொடர்புகளை அதிகக் கண்காணிப்புடன் கண்காணித்து, நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளன

வைரஸ் மூளையழற்சியால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு முக்கிய அறிகுறிகளாக காய்ச்சல், வாந்தி, தலைவலி மற்றும் கழுத்து வலி என்பன காணப்படும் என்றும், இந்த நோய் நீர் மற்றும் உணவு மூலம் பரவுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே உடனடி மற்றும் முறையான மருத்துவ சிகிச்சையில் மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் நோயை குணப்படுத்த முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும்போது அல்லது இருமும்போது காற்றில் சேரும் நீர்த்துளிகள் மூலமாகவும் இந்த வைரஸ் பரவக்கூடும் என எச்சரித்துள்ளனர்.

பயன்படுத்தப்படும் சில உபகரணங்கள் மூலம் நோய்வாய்ப்பட்ட நபரிடமிருந்து ஆரோக்கியமான நபருக்கு வைரஸ் பரவக்கூடும் என்பதால், வெசாக் தானசாலைகள் மூலம் மூளையழற்சி பரவ வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.