வெற்றி பெற்றது ஐக்கிய மக்கள் சக்தி!!

 


இடைக்காலத் தடை உத்தரவினால் இடைநிறுத்தப்பட்டிருந்த வனாத்தவில்லு பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இன்று (27) நடைபெற்றது.

இதன்போது, பொது எதிர்க்கட்சியின் ஆதரவுடன் 2 மேலதிக வாக்குகளைப் பெற்று, ஐக்கிய மக்கள் சக்தியின் வின்சன் பிரான்சிஸ் தவிசாளர் பதவியைக் கைப்பற்றினார்.

இதில் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிக்கு 8 வாக்குகள் மாத்திரமே கிடைத்தன.

உப தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பில் 11 மேலதிக வாக்குகளைப் பெற்று, அந்தப் பதவிக்கு பொது எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் துசித லக்மால் தெரிவானார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.