அதிசொகுசு மோட்டார் சைக்கிள் பறிமுதல்!!

 


கிளிநொச்சி பகுதியில் பொலிஸாரின் விசேட அதிரடி வீதி சோதனை நடவடிக்கையில் 12 அதிவேக சொகுசு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வீதி விபத்துக்களை தடுப்பதையும், பாதசாரிகள் மற்றும் ஏனைய வாகன சாரதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு நேற்றுமுன்தினமும், நேற்றும் (23, 24) இந்த அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன.

இதன்போது, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 12 அதிவேக சொகுசு மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.