பொலிசாரின் முக்கிய அறிவிப்பு!!

 


2026 ஆம் ஆண்டிற்கான உரிமங்களை புதுப்பிப்பதற்கு இணையாக, உயிர்க்காப்பு துப்பாக்கி உரிமம் வைத்திருப்பவர்களின் துப்பாக்கிகளுக்கான சான்றிதழ் ஒன்றை வழங்குவது தொடர்பாக பொலிசாரால் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, உரிமத்தைப் பெற்று அரை வருடம் (ஆறு மாதங்கள்) நிறைவடையும் போது, அதற்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு துப்பாக்கியை சமர்ப்பித்து, துப்பாக்கியின் செயல்பாடு மற்றும் அதன் இலக்கம், உரிமத்தின் இலக்கத்துடன் ஒத்துப்போகிறது என்பதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என பாதுகாப்பு சபையினால் அனைத்து உயிர்க்காப்பு துப்பாக்கி உரிமங்களையும் புதுப்பித்துக் கொண்ட உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.