வெனிசுவேலாவில் மக்கள் போராட்டம்!!
வெனிசுவேலாவில் அடுத்தடுத்து தாக்கிய இரட்டை நிலநடுக்கங்களால் தலைநகர் காரகாஸ் கடுமையான பேரழிவைச் சந்தித்துள்ள நிலையில், அங்கு நிலவரங்களை நேரில் பார்வையிடச் சென்ற நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸிற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துக் கூச்சலிட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தால் உருக்குலைந்துள்ள காரகாஸின் குடியிருப்புப் பகுதி ஒன்றிற்கு ஜனாதிபதி சென்றபோது, அங்குத் திரண்டிருந்த உள்ளூர்வாசிகள் அரசாங்கத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்துக் கூச்சலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வெனிசுவேலாவில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் கடுமையான பொருளாதார வீழ்ச்சி மற்றும் பலவீனமான உள்கட்டமைப்பு வசதிகள் காரணமாக, இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் பெரும் தொய்வைச் சந்தித்துள்ளதே மக்களின் இந்த கோபத்துக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

.jpeg
)





கருத்துகள் இல்லை