வரணியில் விபத்து - இளைஞன் பலி!!

 


வரணி சிட்டிவேரம் பகுதியில் இன்று சனிக்கிழமை (18) பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இவ்வாறு உயிரிழந்தவர் நெல்லண்டை, தும்பளை, பருத்தித்துறையைச் சேர்ந்த சின்னராசா துளசிகன் (வயது-27) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.


கொடிகாமத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது சிட்டிவேரம் அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.