அரசாங்கத்திற்கு கிடைத்த பெருந்தொகைப்பணம்!!

 



2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் 27 வீதம் அதிகரித்து 2.956 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. 

நிதி அமைச்சின் நிதிக்கொள்கை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பொது நிதி ஆய்வறிக்கையின்படி, இக்காலப்பகுதியில் வரவு - செலவுத் திட்டப் பற்றாக்குறைக்கு பதிலாக 9.5 பில்லியன் ரூபா உபரி பதிவாகியுள்ளது.

2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 405.6 பில்லியன் ரூபா வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை பதிவாகியிருந்தது.

இருப்பினும், இம்முறை உபரி பதிவாகியமைக்கு அரச வருமானம் 27 வீதம் அதிகரித்தமையும், அரச செலவினங்கள் சீரமைக்கப்பட்டமையுமே முக்கிய காரணம் என அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில், 2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வரி வருவாய் 2,710.6 பில்லியன் ரூபாவாக (2.71 டிரில்லியன் ரூபா) அதிகரித்துள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 25.9 வீதம் அதிகரிப்பாகும். இதன்படி, ஆண்டின் மொத்த வரி வருவாய் இலக்கான 4.91 டிரில்லியன் ரூபாவில் 55.2 சதவீதத்தை முதல் ஆறு மாதங்களிலேயே அரசாங்கம் எட்டியுள்ளது.

வரி வருவாயில் அதிக பங்களிப்பை இலங்கை சுங்கம் வழங்கியுள்ளதுடன், அது 1,290 பில்லியன் ரூபாவைச் சேகரித்துள்ளது. இது மொத்த வரி வருவாயில் சுமார் 48 சதவீதமாகும். இரண்டாவது அதிகபட்ச பங்களிப்பை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வழங்கியுள்ளதுடன், அது 1,248 பில்லியன் ரூபா வருவாயை ஈட்டியுள்ளது. 



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.