சிக்கவுள்ள பெரும்புள்ளி!!
ஹரக் கட்டாவின் மனைவியிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் 120 மில்லியன் ரூபா இலஞ்சப் பணத்தின் ஒரு பகுதி, பௌத்த தேரர் ஒருவர் ஊடாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்குக் கைமாற்றப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் விசாரணையாளர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நேற்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
ரகித ராஜபக்ச, சரித் அபேசிங்க மற்றும் அருண் வருஷஹென்னடிகே ஆகியோருக்கு எதிரான வழக்கு, கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை