அமெரிக்கா ஜ- ஈரான் போர் பதற்றம்!!

 



அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் போரின் எதிரொலியாக, மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது.


ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹூதி அமைப்பினர், சவூதி அரேபியாவின் செங்கடல் பகுதியில் உள்ள இரு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்கு வைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சவூதியின் ஜிஷான் மற்றும் யான்பு நகரங்களில் உள்ள 'அராம்கோ' நிறுவனத்தின் ஆலைகள் மீது இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக ஹூதி இராணுவத் செய்தி தொடர்பாளர் யஹ்யா சாரீ அறிவித்துள்ளார்.

அதேவேளையில், ஈரானின் ஹார்முஸ் நீரிணைபகுதியில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து அமெரிக்கா நடத்தி வந்த தொடர் வான்வழித் தாக்குதல்கள் கடந்த இரண்டு நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையே சமரச தூதுவர்கள் மூலமாகப் பேச்சுவார்த்தைகள் மறைமுகமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.