சீதா!!
இன்னும் இன்னும்
பேசிக்கொண்டே இருக்கிறீர்கள்
காலம் கடந்தும்
சீதையைப் பற்றி...
எப்போதாவது
பேசியிருக்கிறீர்களா ?
உங்களுடன்
வாழ்க்கைப் பயணத்தில்
கைகோர்த்து வரும்
நிஜத்தின் சீதாக்களைப் பற்றி...
அவர்களின்
அன்பைப் பற்றி
தியாகத்தைப் பற்றி
அமைதியான போராட்டங்களைப் பற்றி...
புராணங்களில் மட்டுமல்ல
இன்றும்
சீதைகள் வாழ்கிறார்கள்.
அவர்களை
புரிந்துகொள்வதும்
மதிப்பதும்
போற்றுவதும்தான்
உண்மையான இராமாயணம்.
*ராம்...✍️
Ram Chandran

.jpeg
)





கருத்துகள் இல்லை