அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!!

 



அரச ஊழியர்களின் ஓய்வூதியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில் ஆணைக்குழுவொன்று நிறுவப்பட்டுள்ளது.


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் 2026 வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைய இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டது.

இது தொடர்பான அறிவித்தல் 2026 ஜூன் 22 ஆம் திகதியிட்ட 2494/05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டது.

ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் அசோக பீரிஸ் தலைவராகவும், நாலக திசாநாயக்க செயலாளராகவும் செயல்படும் இந்த ஆணைக்குழுவில் 15 உறுப்பினர்கள் அடங்கியுள்ளனர்.


அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குதல், அரசு ஊழியர்களின் தொழில்முறைத் திறனை மேம்படுத்துதல், புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப அரச சேவை எவ்வாறு கட்டமைப்பு ரீதியாக சீரமைக்கப்பட வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளை வழங்குதல் ஆகிய பொறுப்புகள் இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கருத்துத் தெரிவித்த அமைச்சர் சந்தன அபேரத்ன, அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இருபது ஆண்டுகளுக்குப் பிறகே ஆணைக்குழுவொன்று அமைக்கப்படுவதாகவும், ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆணைக்குழுவொன்று அமைக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் குறிப்பிட்டார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.