வாகன விலைகள் அதிகரிப்பு!!

 



வாகன இறக்குமதி வரிகள் மீதான 50 சதவீத கூடுதல் கட்டணம் நீடிக்கப்பட்டுள்ளமையினால் மே 15 ஆம் திகதிக்கு பின்னர் கடன் கடிதங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மனேஜ தெரிவித்துள்ளார். 


இதன்படி, வாகனங்களின் விலை ரூ. 1.5 முதல் 5 மில்லியன் வரை அதிகரிக்கும் என்று வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

வாகன இறக்குமதி வரிகள் மீது அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட 50 சதவீத கூடுதல் கட்டணம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்ட (235 ஆம் அத்தியாயம்) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10அ பிரிவின் கீழ் ஜனாதிபதிக்களிக்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாகனங்கள் மீதான கூடுதல் கட்டணத்தை நீட்டிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என்று வாகன இறக்குமதியாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், டிசம்பர் 31 வரையிலான நீட்டிப்பு வாகனங்களின் விலையை அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.

அதன்படி, மே 15 ஆம் திகதிக்குப் பிறகு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மனேஜ தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.