800 மில்லியன் கொள்ளை - குற்றவாளி கைது!!




 தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் இடம்பெற்ற 800 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியும் வாகன சாரதியுமான நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் நடத்திய விசேட சோதனையில் சந்தேகநபர் முல்லேரியாவ பகுதியில் வைத்து வளைத்துப் பிடிக்கப்பட்டார்.

கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 15.5 மில்லியன் ரூபா, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு வாகனம், திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.