மீண்டும் தீப்பரவல்!!
யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு மணக்காடு பகுதியில் அமைந்துள்ள சவுக்கந்தோப்பில் இன்றும் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட தீப்பரம்பல் விமான படையை உலங்கு வானூர்த்தி மூலம் நீர் பாய்ச்சப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினமும் மீண்டும் தீ பரம்பல் ஏற்பட்டிருக்கிறது.
தீயணைப்பதற்காக பருத்தித்துறை பிரதேச சபையின் நீர் தாங்கி உழவு இயந்திரம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.
யாழ். மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரி ஒருவரும் இங்கே சமூகமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.jpeg
)





கருத்துகள் இல்லை