புதிய அரசமைப்பு வரைவு தொடர்பாக நிபுணர் குழு கூட்டத்தில் இன்று ஆராய்வு!
புதிய அரசமைப்புக்கான வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. வழிநடத்தல் குழுவுக்கு ஆலோசனை வழங்கும் 10 பேர் கொண்ட நிபுணர் குழுவின் இன்றைய கூட்டத்தில் இந்த வரைவு முன்வைக்கப்பட்டு ஆராயப்படவுள்ளது. இன்று இறுதியாக்கப்படும் வரைவு எதிர்வரும் வியாழக் கிழமை கூடவுள்ள வழிநடத்தல் குழுவுக்குச் சமர்பிக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழு தயாரித்த இடைக்கால அறிக்கை, அரசமைப்பு நிர்ணயசபையாக மாற்றப்பட்ட நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. டிசெம்பர் மாதத்தில் இதன் விவாதம் முடிவுற்றது. நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை உள்ளடக்கி அரசமைப்புக்கான வரைவு தயாரிக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம், நிபுணர் குழுவினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையும் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக, நிபுணர் குழுவின் சில உறுப்பினர்கள் இந்த வரைவைத் தயாரிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழு தயாரித்த இடைக்கால அறிக்கை, அரசமைப்பு நிர்ணயசபையாக மாற்றப்பட்ட நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. டிசெம்பர் மாதத்தில் இதன் விவாதம் முடிவுற்றது. நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை உள்ளடக்கி அரசமைப்புக்கான வரைவு தயாரிக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம், நிபுணர் குழுவினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையும் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக, நிபுணர் குழுவின் சில உறுப்பினர்கள் இந்த வரைவைத் தயாரிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
கருத்துகள் இல்லை