கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை!

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பை ஆதரிக்கும் வகையில் இந்த நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் மீதான நம்பத்தன்மை குறைந்து அதன் மதிப்பு சரிய ஆரம்பித்தது.
இந்தியாவில் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் பேஸ்புக் உள்ளிட்ட எந்த சமூக வலைத்தளம் ஈடுபட்டாலும் அரசு சகித்துக் கொள்ளாது என மத்திய மந்திரி ரவிசங்கர் பிர்சாத் எச்சரித்துள்ளார்.
பேஸ்புக் இழைத்த தவறால், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது என பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பர்க் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே, பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டு தவறாக பயன்படுத்தப்பட்டது தொடர்பான புகார்களுக்கு விளக்கம் அளிக்கும்படி கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துக்கு மத்திய அரசு நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தில் சோதனை நடத்துவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்ற உயர் நீதிமன்றம் அங்கு சோதனை நடத்த வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இதையடுத்து, அங்கு சென்று சோதனை நடத்தினோம் என தெரிவித்துள்ளனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.