பிரதேசசபை தலைவர் தெரிவில் பதற்ற நிலை!

மஸ்கெலியா பிரதேச சபைக்கான தலைவர் தெரிவு இன்று(28-03-2018) மத்திய மாகாண உள்ளுராட்சிஆளுனர் ஹேரத் தலைமையில் இன்று அரம்பமானது.


இதன்போது ஐக்கிய தேசிய கட்சியில் தெரிவான உறுப்பினர் வராததால் பதற்ற நிலை உருவான நிலையில் ஐக்கிய தேசிய கட்சியினை சேர்ந்த உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து தமது எதிர்ப்பினை வெளிக்காட்டினர்.

இதனை தொடர்ந்து சபை தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இந்த வாக்கெடுப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் கற்பகவள்ளி தலைவராகவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் உபதலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் ஊர்வலம் செல்ல முற்பட்டதனையடுத்து இருசாராருக்குமிடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டு பின் அது கல்வீச்சாக மாறியது.இக்கல்வீச்சில் சிலர் சிறிய காயங்களுக்கு உள்ளானதுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கல்வீச்சு காரணமாக பொது போக்குவரத்து தடைபட்டதுடன் வாகன நெரிசல்களும் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து ஏனைய பொலிஸ் நிலையங்களிலிருந்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் இந்த கல்வீச்சு சம்பவங்களுடன் இரு கட்சிகளினதும் அரசியல் பிரதிநிதிகளும் ஈடுபட்டதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனா்.

இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியில் தெரிவான உறுப்பினர் காயமடைந்த நிலையில் நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.