வடமாகாண முதலமைச்சரை இராணுவத்தளபதி மஹேஸ் சேனநாயக்க சந்திப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள இரணுவத்தளபதி மஹேஸ் சேனநாயக்க வடமாகாண முதலமைச்சர்
சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார்.

கைதடியிலுள்ள வடமாகாண முதலமைச்சர் அலுவலகததில் இன்று(29-03-2018) மாலை இடம்பெற்ற இச்சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக யாழ் மாவட்டத்தில் இராணுவத்தினர் வசம் எஞ்சியுள்ள காணிகளையும் விரைவில் விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் தாம் சாதகமாக பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக இராணுவத்தளபதி தம்மிடம் உறுதியளித்ததாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.