‘தமி­ழன்’ கைக்­குண்­டு­கள் மீட்டு அழிப்பு!

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளால் தயா­ரிக்­கப்­பட்டு போர்க் காலத்­தில் பயன்­ப­டுத்­தப்­பட்­டது
என்று கூறப்­ப­டும் ‘தமி­ழன்’” கைக்­குண்­டு­கள் 10 நேற்று மீட்­கப்­பட்டு அழிக்­கப்­பட்­டுள்­ளன என்று சிறப்பு அதி­ர­டிப்­படை தெரி­வித்­தது.

முல்­லைத்­தீவு முள்­ளி­வளை கொண்­டை­மடு காட்­டுப் பகு­தி­யில் ஒரு தொகுதி கைக்­குண்­டு­கள் காணப்­ப­டு­கி­றது என்று முள்­ளி­ய­வ­ளைப் பொலி­ஸா­ருக்கு தக­வல் கிடைத்­தது. தக­வல் சிறப்பு அதி­ர­டிப் படை­யி­ன­ருக்­குப் பரி­மா­றப்­பட்­டது.

கைக்­குண்­டு­களை மீட்­ப­தற்­கான அனு­ம­தியை சிறப்பு அதி­ரப்­ப­டை­யி­னர் நேற்று முல்­லைத்­தீவு நீதி­மன்­றில் கோரி­னர். மன்­றின் உத்­த­ர­விற்கு அமைய குண்­டு­கள் மீட்­கப்­பட்டு அழிக்­கப்­பட்­டன என்று அதி­ரப்­படை தெரி­வித்­தது.

போர் நடை­பெற்ற காலத்­தில் விடு­த­லைப்­பு­லி­க­ளால் தயா­ரிக்­கப்­பட்டு போரின் போது பாவிக்­கப்­பட்ட தமி­ழன் வகைக் கைக்­குண்­டு­கள் அவை என்று தெரி­விக்­கப்­பட்­டது. இந்த கைக்­குண்­டு­கள் அதன் கவ­சத்­து­டன் காணப்­பட்­டன என்­றும் சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யி­னர் மேலும் தெரி­வித்­த­னர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.