நாளை ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்!

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை (29) இடம்பெறவுள்ளது. 

அந்தக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது. 

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளினதும் தலைவர்கள் நாளை கூடவுள்ளனர். 

நாளை மாலை 04.00 மணியளவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதென்று அமைச்சர் மனோ கணேசன் கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.