கல்லடி பாலத்தில் சிசிரிவி கமராக்களை பொறுத்த வேண்டும்!

புதிய மாநகரசபை உறுப்பினர்கள் பதவியேற்றதன் பின்னர் முதல் கடமையாக மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் சிசிரிவி கமராக்களை பொறுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமென முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக முக்கிய இடமாகவும் கேந்திர நிலையமாகவும் கல்லடிப்பாலம் உள்ளது. அதன் ஊடாக நடைபெறும் சம்பவங்களை அவதானிப்பதற்காக சிசிரிவி கமராக்களை பொறுத்தவேண்டும் அண்மைக்காலமாக கல்லடி பாலத்தின் ஊடாக தற்கொலைகள் அதிகரித்துள்ள நிலையில் அதில் சிலர் தற்கொலையா கொலையா என்று சந்தேகிக்கும் நிலையுள்ளது. அதன் காரணமாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதை சிசிரிவி கமராக்களை பொறுத்துவதன் ஊடாக தடுக்கமுடியும்
அத்துடன் எங்காவது கடத்தப்படும் வாகனங்கள் அல்லது சட்ட விரோத நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கல்லடி பாலம் ஊடாக மேற்கொள்வதற்கான சந்தர்ப்பங்களையும் கண்டறிய கூடிய நிலையை இதன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும். மட்டக்களப்பு மாநகரசபையில் கடமையேற்கும் உறுப்பினர்கள் முதலாவது கையெழுத்தினை இந்த நடவடிக்கைக்கு இடவேண்டும்” என கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.