இலங்கை குறித்த முதல் விவாதம் இன்று ஜெனீவாவில்!

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
முன்னதாக கடந்த 16ஆம் திகதி, இலங்கை  தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், ஐ.நா பணியாளர்களின் ஊதிய உயர்வுப் போராட்டத்தினால், அன்றைய அமர்வுகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டன.
இதனால்  இலங்கை தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை இன்று விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.
இன்றைய விவாதத்தில்  இலங்கை குழுவுக்கு ஜெனீவாவுக்கான நிரந்தர விதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தலைமை தாங்குவார்.
அதேவேளை, நாளை மறுநாள் இலங்கை தொடர்பான தமது இடைக்கால அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.
இதையடுத்து நடக்கவுள்ள விவாதத்தில் பங்கேற்று பதிலளிப்பதற்காக, இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம உள்ளிட்டோர் அடங்கிய குழு ஜெனீவா செல்லவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.