கோட்டாபாயவை கைது செய்வதற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர், கோட்டாபாய ராஜபக்சவை கைது செய்வதற்கு எதிரான தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

பொதுச் சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்து, பாரிய நிதி மோசடி செய்துள்ளதாக  கோட்டாபாய ராஜபக்ச மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், தன்னை கைது செய்வதனை தடை செய்யுமாறு கோரி கோட்டாபாய ராஜபக்ச தடையுத்தரவு பெற்றுக்கொண்டிருந்தார். இந்நிலையில் குறித்த தடையுத்தரவு எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் நீடிக்கப்பபட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.