நீரில் மூழ்கி வெளிநாட்டவர் ஒருவர் பலி!

ஹிக்கடுவை, வேவல பகுதியில் கடலில் குளித்துக்கொண்டிருந்த வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

அலையில் சிக்கி கவலைக்கிடமாக இருந்த நபரை கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே அவர் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

பெலரூஸ் நாட்டினை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.