மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் மீனவர் ஒருவர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் உள்ள ஆற்றில் உயிரிழந்த நிலையில் மீனவர் ஒருவரை சடலமாக இன்று (10) காலை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். 

மாரியம்மன்கோவில் வீதி மட்டக்களப்பைச் சேர்ந்த 58 வயதுடைய கணவதிப்பிள்ளை நாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த மீனவர் வழமைபோல மீன்பிடிப்பதற்கு நேற்று (09) இரவு சென்றுள்ள இவர் வீடு திரும்பாததையடுத்து உறவினர் இவரை தேடிய நிலையில் சம்பவதினமான இன்று காலை கல்லடிப் பாலத்தின் கீழ் உள்ள ஆற்றில் உயிரிழந்த நிலையில் சடலமாக கரையொதுங்கியுள்ளார். 

இதனையடுத்து பொலிசார் சடலத்தைமீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதான வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர் .உயிரிழந்தவருக்க வலிப்பு நோய் உள்ளதாக பொலிசாரின் ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்கடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.